Header Ads

மாணவர்களை பாராட்டி கௌரவிக்கின்ற நிகழ்வு

அண்மையில் வெளிவந்த புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மட்.முனைக்காடு சாரதா வித்தியாலய மாணவர்களையும், வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மட்.முனைக்காடு விவேகானந்த வித்தியாலய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கின்ற நிகழ்வு இன்று(21) செவ்வாய்க்கிழமை வித்தியாலய மண்டபத்தில் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் திரு.மு.நமசிவாயம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் அதற்கு காரணமாக அமைந்த ஆசிரியர்கள் அதிபர் ஆகியோர் கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான திரு.ஞா.சிறிநேசன், கரிகரராஜ், சிறிதரன், உதவிக்கல்விப் பணிப்பாளர்களான திருமதி.ரஞ்சிதமலர் கருணாநிதி, மாணிக்கப்போடி, ஆசிரிய ஆலோசகர் திரு.பே.குமாரலிங்கம், பாடசாலை அதிபர்கள், ஓய்வுபெற்ற கிராமசேவை உத்தியோகத்தர், நாகலிங்கேஸ்வரர் ஆலய பிரதமகுரு.ப.மானாகப்போடி, ஆலயத் தலைவர் பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.




















கருத்துகள் இல்லை