குரு பெயர்ச்சி பலன் 2014-2015 மிதுனம் ;
குரு பெயர்ச்சி பலன் 2014-2015 மிதுனம் ;
மிருகசீரிஷம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்
மிருகசீரிஷம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்
பார்வைக்கு வெகுளிப் போல இருந்தாலும் தன்னுடைய காரியங்கள் அனைத்தையும்
எளிதில் சாதித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி அன்பர்களே! பொன்னவன்
என போற்றப்படும் குரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு 2ஆம் வீட்டில்
13.06.2014 முதல் 5.07.2015 வரை உச்சம் பெற்று சஞ்சாரம் செய்கிறார்.
இதனால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி கணவன் மனைவியிடையே
அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள்
கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக
இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும்.
புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு
சொந்த வீடு வாகனம், கார் பங்களா போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும்.
கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவும்
முடியும். 16.12.2014 முதல் சனி பகவானும் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பது
அற்புதமான அமைப்பாகும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில்
வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினை அடைய முடியும். அபிவிருத்தியும்
பெருகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். வெளியூர் வெளி
நாடுகளுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும்.
தேக ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கடந்த கால மருத்துவக் செலவுகள்
குறையும். மனைவி பிள்ளைகள் சுபிட்சமாக அமைவார்கள். மனதில் மகிழ்ச்சி குடி
கொள்ளும் நீண்ட நாள் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு
படிப்படியான முன்னேற்றம் உண்டாகும்.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் மகிழ்ச்சியும்
சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள்
கிடைக்கப் பெறும். கணவன் மனைவி ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அன்யோன்யம்
அதிகரிக்கும். பண வரவுகள் தாராளமாக அமையும். பொன் பொருள் சேரும். சிலருக்கு
பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். திருமண சுப காரியங்கள் தடபுடலமாக
நடைபெறும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும்.
கொடுக்கல் வாங்கல்
பொருளாதார நிலை மிகவும் முன்னேற்ற கரமானதாக இருப்பதால் கொடுக்கல்
வாங்கலில் சரளமான நிலையினை அடைய முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி
வசூலாகும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். வெளி
வட்டார தொடர்புகள் விரிவடையும் பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.
உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.
தொழில் வியாபாரிகளுக்கு
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். புதிய
வாய்ப்புகளும் தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள்
கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய
கூட்டாளிகளின் சேர்க்கை அபிவிருத்தியை பெருக்க உதவும். வெளியூர் தொடர்புடைய
வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியினைத் தரும்.
திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறும். எதிர்பார்த்த
இடமாற்றங்களும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். எடுக்கும் பணிகளை திறம்பட
செய்து முடிக்க முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய
விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.
நினைத்தது யாவும் நிறைவேறி மகிழ்ச்சி தரும்.
அரசியல்வாதிகளுக்கு
பெயரும் புகழும் உயரக் கூடிய காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள்
அனைத்திலும் வெற்றி கிட்டும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை
மேற்க்கொள்வீர்கள். மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் வெற்றிகள்
குவியும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். மாண்புமிகு பதவிகள் தேடி வரும்.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற
விலையும் சந்தையில் கிடைப்பதால் தாராள தன வரவுகள் உண்டாகும். நீர் வரத்து
தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளை கையாண்டு அபிவிருத்தியை
பெருக்குவீர்கள். புதிய பூமி நிலம் மனை போன்றவற்றை வாங்கும் யோகமும்
உண்டாகும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் சுறு
சுறுப்பாக ஈடுபட முடியும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
மணமாகதவர்களுக்கு மணமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும்
நிலவும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். சொந்த கார் பங்களா
போன்றவற்றை வாங்வீர்கள். சேமிப்பும் பெருகும்.
படிப்பு
நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப்
பெற முடியும். கல்விக்காக வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும்
உண்டாகும். விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான பரிசுகளை பெறுவீர்கள்.
ஸ்பெகுலேஷன்
ஷேர், ரேஸ், லாட்டரி போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபத்தை காண முடியும்.
குரு பகவான் புனர் பூச நட்சத்திரத்தில் 13.06.2014 முதல் 28.06.2014 வரை
குரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்திரல் ஜென்ம ராசிக்கு 2இல் உச்சம்
பெற்று சஞ்சரிக்கிறார். இக்காலங்களில் குடும்பத்தில் சுபிட்சமான
நிலையிருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி கைகூடும். பண
வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும்
பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும்.
உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும்
தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய
வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன்
செயல்படுவார்கள். அபிவிருத்தியும் பெருகும். தொழில் ரீதியாக மேற் கொள்ளும்
பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகள்
விலகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் பணியில்
திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.
குரு பகவான் பூச நட்சத்திரத்தில் 29.06.2014 முதல் 28.08.2014 வரை
குரு பகவான் சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 2இல் சஞ்சாரம்
செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் நினைத்தது யாவும் நிறைவேறும்.
எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொளாதார நிலை மிகச்
சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பொன் பொருள்
சேரும். கணவன் மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். புத்திர வழியில்
மகிழ்ச்சிதரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சொந்த பூமி மனை வாங்கும்
யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலும் சரள நிலையில் நடைபெறும்.
பெரிய தொகைகளை கடனாக கொடுத்து லாபத்தைப் பெற முடியும். தொழில் வியாபார
ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் லாபம் கிட்டும். பயணங்களால்
அனுகூலம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
கூட்டாளிகள் புதிதாக சேருவார்கள். உத்தியோகஸ்தர்களும் பணியில் திறம் பட
செயல்பட்டு கை நழுவிய பதவி உயர்வுகளை தடையின்றி பெறுவார்கள். சிலருக்கு
விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும்.
குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 29.08.2014 முதல் 02.12.2014 வரை
குரு பகவான் தன ஸ்தானமான 2இல் ராசியாதியாதியின் சாரத்தில்
அமைந்திருக்கும். இக்காலங்களிலும் மேன்மையானப் பலன்களே உண்டாகும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். தடைப்பட்ட
சுபகாரியங்கள் தடை விலகி கை கூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால்
குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும்.
கணவன்-&மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். பலருக்கு உதவிகள் செய்யக்
கூடிய வாய்ப்பும் கிட்டும். ராகு பகவான் 3&இல் சஞ்சரிப்பதால்
நினைத்தது நிறைவேறும். கொடுக்கல்&வாங்கலும் சரளமான நிலையில்
நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அரசு
வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும் வெளியூர் வெளிநாட்டுத்
தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால்
அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய
உயர்வுகளைப் பெற முடியும்.
குரு பகவான் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் 03.12.2014 முதல் 21.12.2014 வரை
குரு பகவான் சிம்ம ராசியில் கேதுவின் நட்சத்திரத்தில் அதிசாரமாக ஜென்ம
ராசிக்கு 3இல் சஞ்சாரம் செய்கிறார். இக்காலங்களில் சனியும் 5இல்
சஞ்சரிப்பதால் அலைச்சல், டென்ஷன், எடுக்கும் முயற்சிகளில் தடை போன்ற
அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகும். ராகு 3&இல் சஞ்சரிப்பதால் எதையும்
சமாளிக்க கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாகவே
இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை
சந்திப்பீர்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. கணவன்
மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது மூலம்
அபிவிருத்தியை பெருக்கு கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிலும் சற்று
கவனமுடன் செயல்படவும். வரும் 16.12.2014 இல் ஏற்படவுள்ள சனி பெயர்ச்சியின்
மூலம் சனி பகவான் 6&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பது அற்புதமான
அமைப்பு என்பதால் நினைத்தது யாவும் நிறைவேறும்.
குரு பகவான் வக்ர கதியில் 22.12.2014 முதல் 15.04.2015 வரை
குரு பகவான் தன ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் வக்ரகதியில் இருப்பதால்
இக்காலங்களில் ஏற்ற இறக்கமானப் பலன்களையேப் பெற முடியும் என்றாலும் சனி
பகவான் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொள்ளும் பலமும்
வளமும் கூடும் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து
குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள்
தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள்
கிடைக்கும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய
கெடுதியில்லை. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை
தடையின்றி அடைய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய
விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல்
வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கடன்கள் சற்றே
குறையும்.
குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 16.04.2015 முதல் 05.07.2015 வரை
குரு பகவான் ராசியாதிபதி புதனின் நட்சததிரத்தில் ஜென்ம ராசிக்கு 2இல்
சஞ்சரிக்கும் இக்காலங்களில் அற்புதமான நற்பலன்களைப் பெற முடியும். தாராள
தனவரவுகளை கொடுக்கும். பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும்
படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும்.
புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை விரிவு செய்வீர்கள். கூட்டாளிகளும்
ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை
ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன்
மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுப காரியங்கள் தடபுடலாக
கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளி
வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். சனி பகவானும் 6&ஆம் வீட்டில்
சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மென்மேலும் வெற்றிகள்
கிட்டும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். கல்வியிலும்
மாணவர்கள் சிறந்து விளங்க முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள்
அதிகார குணமும் பிறரை அடக்கி ஆளும் சுபாவமும், நல்ல நிர்வாகத்
திறமையும் கொண்ட உங்களுக்கு குரு பகவான் தன ஸ்தானமான 2&இல்
சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில்
மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள்
யாவும் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத் தேவைகள்
அனைத்தும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல
உயர்வுகளும் லாபங்களும் ஏற்படும். கடன்கள் படிப்படியாக குறையும்.
திருவாதிரை
முன் கோபம் இருந்தாலும் அனைவரிடமும் தன்மையாகவே பழகும் குணம் கொண்ட
உங்களுக்கு குரு பகவான் 2&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில்
நிம்மதி நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எடுக்கும்
முயற்சிகளில் வெற்றி கிட்டும். மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும்.
சிலருக்கு சொந்த பூமி மனை வாங்கும் யோகம் அமையும். உத்தியோகஸ்தர்கள்
எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளையும், பதவி உயர்வுகளையும் தடையின்றி பெற
முடியும். கொடுக்கல் வாங்கல் லாபம் அளிக்கும்.
புனர்பூசம் 1,2,3&ம் பாதங்கள்
தான் கற்றதை பிறருக்கும் கற்றுரைக்கும் நற்குணம் கொண்ட உங்களுக்கு
குரு பகவான் 2ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் முன்னேற்றங்கள்
உண்டாகும். பண வரவுகள் பஞ்சமின்றி இருக்கும். கொடுக்கல் வாங்கல் சரள
நிலையில் நடைபெறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.
கடன்கள் குறையும். பொன் பொருள் சேரும். பூர்வீக சொத்துக்களால் லாபம்
அமையும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பெருகும். மணமாகாதவர்களுக்கு
நல்ல வரன்கள் தேடி வரும்.
அதிர்ஷ்டம் அளிப்பை
எண் -5,6,8,14,15,17
நிறம் -பச்சை, வெள்ளை
கிழமை - புதன், வெள்ளி
கல் - மரகதம்
திசை- வடக்கு
தெய்வம் - விஷ்ணு
பரிகாரம்
மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சனி பகவான் 16.12.2014 வரை
5& ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சனிக்கிழமை தோறும் சனிக்கு பரிகாரம்
செய்யவது நல்லது. ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை
செய்யல
Post a Comment