பவளக்கொடி வடமோடிக் கூத்து சதங்கை அணிவிழா.

உறசவங்கள், சடங்குகளை முன்னிட்டு பாரம்பரிய வடமோடி , தென்மோடிக்
கூத்துக்களை ஆற்றுகை செய்து வருவது வழக்கம். அந்த வகையிலே கடந்த காலங்களில் அரிச்சந்திரன் மயாணகாண்டம், கும்பகர்ணன் வதை, சராசந்தன் போர், பப்பிரவாகன் நாடகம், நல்லதங்காள் நாடகம், பகாசூரன் சண்டை, உலகநாச்சி, நிர்முகன் வதை(தென்மோடி), அலங்காரரூபன் (தென்மோடி) போன்ற கூத்துக்களை
மிகப்பிரமாண்டம்ன முறையில் கூத்தின் அடிப்படை பாரம்பரிய அம்சங்கள்
பிரளாமல் ஆற்றுகை செய்துள்ளனர்.
அந்த வரிசையில் இந்த வருடம் மகாபாரத இதிகாசத்தின் கிளைக்கதைகளில் ஒன்றான "பவளக்கொடி " வடமோடிக்கூத்தினை ஆற்றுகை
செய்யவுள்ளனர். இதன் சட்டம் கொடுக்கும் நிகழ்வுகள் , பயின்நிலைக் களரிகள் முடிவடைந்து அடுத்த கட்டமான சலங்கை கட்டும் நிலைக்கு வளர்க்கப்பட்டுள்ளது. இதன் சதங்கை அணிவிழா எதிர் வருகின்ற 10 - 05 - 2014 (சனிக்கிழமை) சுப வேளையில் காலை 8.00 மணிக்கு அண்ணாவியர் ப.கதிர்காமநாதன் தலைமையில் முனைக்காடு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் இடம் பெறவுள்ளது . இந் நிகழ்விற்கு அனைத்துக் கலை ஆர்வலர்களின் வருகையினையும் வேண்டி நிற்க்கின்றனர் நாகசக்தி கலை மன்றத்தினர்.
Post a Comment