Header Ads

முனைக்காட்டில் பவளக்கொடி வடமோடி கூத்து சதங்கை அணி விழா

முனைக்காடு நாகசக்தி கலை மன்றமானது வருடம் தோறும் பாரம்பரிய கலைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில் பல பாரம்பரிய நிகழ்வுகளை ஆற்றுகை செய்துவருவது வழக்கம் அதில் 2014ம் ஆண்டின் ஆற்றுகையாக பவளக்கொடி வடமோடி கூத்தின் சலங்கை அணி விழாவின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று காலை 09.00மணிக்கு முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலய முற்றத்தில் சுபநேரத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அண்ணாவியார், ஏட்டு அண்ணாவியார், மூத்த கலைஞர்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வுக்கு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் மலர்செல்வன், பிரதேச கலாசார உத்தியோகத்தர், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.








கருத்துகள் இல்லை