Header Ads

தாய்க்கொம்பு முறிக்கும் நிகழ்வு

 மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகம், கலாசார பேரவை ஆகியன இணைந்து நடாத்திய கொம்பு முறி நிகழ்வின் இறுதி நிகழ்வான தாய்க்கொம்பு முறிக்கும் நிகழ்வு இன்று(20) முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளரும்,
கலாசார பேரவைத் தலைவருமான திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களின் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு வணக்கத்திற்குரிய அதிதிகளாக சுவாமி சதுர்புஜானந்தஜி மஹராஜ் (கல்லடி இராமகிருஷ்ணமிஷன்) சிவஸ்ரீ வ.சோதிலிங்க குருக்கள் (கொக்கட்டிச்சோலை தாந்தோன்றீஸ்வரம்) சிவஸ்ரீ பா. மாணாகப்போடி குருக்கள் (முனைக்காடு கண்ணகியம்மன் ஆலயம்), பிரதம அதிதியாக திரு கிரிதரன் (மேலதிக அரசாங்க அதிபர் மட்டக்களப்பு மாவட்டம்), சிறப்பு அதிதியாக திரு பிறேமகுமார் (பணிப்பாளர் சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கை நிறுவகம்) கௌரவ அதிதிகளாக திரு சி.குருபரன் (ஆசிரிய வள நிலைய முகாமையாளர்) தேசபந்து ஆ.சிவனேசராசா (முன்னாள் புகையிரத நிலைய அதிபர்) திரு.துசார (பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி கொக்கட்டிச்சோலை) சாணக்க டீ சில்வா (இராணுவ பொறுப்பதிகாரி) ஆகியோர்களுடன் அழைப்பு அதிதிகளாக அனைத்து ஆலய மதகுருமார்கள் பாடசாலைகளின் அதிபர்களும் கலந்து கொன்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மகிழடித்தீவு கண்ணகியம்மன் ஆலயத்தில் இருந்து வட சேரி தென் சேரி கொம்புகள் ஏடகத்தில் வைத்து அலங்கரிக்கப்பட்டு வீதி ஊர்வலமாக முதலைக்குடா கண்ணகியம்மன் ஆலயத்தை சென்றடைந்து பின்னர் முனைக்காடு கண்ணகியம்மன் ஆலயத்தை வந்தடைந்தது. அங்கே விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றதை தொடர்ந்து இரு சேரி கொம்புகளும் உரிய முறையில் பூட்டப்பட்டு அதற்கான அடை கட்டப்பட்ட பின்னர் செவ்வக குத்தி நிறுத்தி அரிப்பு பூட்டப்பட்ட கொம்புகள் இறுதியில் கண்ணகியம்மன் அருளால் முறியாமல் விலத்திசென்றுவிட்டமை வியப்பிற்குரியவை. பல்லாயிரக்கணக்கான மக்கள் சூழ நடைபெற்ற இவ் விளையாட்டில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான வசந்தன் கூத்து, காவடி ஆட்டம், கும்மி, குரவை போடுதல், என பல நிகழ்வுகளும் நடைபெற்றன.







கருத்துகள் இல்லை