Header Ads

கொட்டாம்புலைப்பிள்ளையார் ஆலயத்தின் சங்காபிஷேக நிகழ்வு

 முனைக்காடு அருள்மிகு ஸ்ரீ கொட்டாம்புலைப்பிள்ளையார் ஆலயத்தின் மகா கும்பாவிஷேகம் அண்மையில் இடம்பெற்றதை தொடர்ந்து மண்டாபிஷேக ப10சைகள் நிறைவுற்று இறுதி நிகழ்வான  1008 சங்குகளால் ஆன  சங்காபிஷேக நிகழ்வு நேற்று(22) ஞாயிற்றுக்கிழமை கொக்கட்டிச்சோலை திருத்தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இருந்து நூற்றுக்கணக்கான அடியவர்களின் பாற்குடபவனியுடன் ஆரம்பித்து ஆலயத்தை வந்தடைந்து அடியார்களின் “அரோகரா” கோசத்துடன் பக்தி உணர்வோடு பாலபிஷேகம் இடம்பெற்று,

1008 சங்குகளால் ஆன சங்காபிஷேகம் சிவஸ்ரீ சச்சிதானந்தக்குருக்கள் அவர்களின் தலைமையில் மேளதாள வாத்தியங்கள் முழங்க மந்திர ஒலிகள் ஓங்கி நிற்க மூலமூர்த்திக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சங்காபிஷேக நிகழ்வு இடம்பெற்றது.
















கருத்துகள் இல்லை