Header Ads

எழுதளிர் வரலாறு


அமைவிடம்
கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படுகின்ற முதுபெரும் கிராமமாகிய முனைக்காட்டுக் கிராமத்தில் இவ் அமைப்பு அமைந்துள்ளது.

01. நிறுவனத்தின் வரலாறும் அறிமுகமும்.

      எழுதளிர் அமைப்பானது 2009.08.01ம் திகதி நாகசக்தி கல்விக்கூடம் என்ற நாமத்துடன் ஆரம்பமாகி பின் அது இளந்தளிர் என்ற பெயருடன் மாற்றமடைந்து தற்காலத்தில் எழுதளிர் என்ற பெயருடன் இயங்கி வருகின்றது.

                          எமது பிரதேசத்தில் இருக்கின்ற மாணவர்களில் பலர் பாடசாலையை விட்டு இடைவிலகி இருந்தனர்;; இதன் நிமிர்த்தம் அம்மாணவர்கள் அனைவரையும் கல்விப் புலத்தில் சேர்த்து சிறந்த கல்வி மான்களாக உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்திற்காக எமது பிரதேச இளைஞர்கள் அனைவரையும் ஒன்று சேர்ந்து பாடசாலைகளுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி அம் மாணவர்களை இனங்கண்டு  பாடசாலைகளுடன் இணைத்ததோடுää அவர்களின் கல்வி அடைவு மட்டம் மிகக் குறைந்த நிலையில் காணப்பட்டதால் அவர்களுக்கு மாலை 06.00மணி தொடக்கம் 07மணி வரை கற்பித்தல் செயற்பாட்டை செயற்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு இவ்வமைப்பை ஆரம்பிக்கப்பட்டது. இதற்காக ஆசிரியர்கள்ää அரசாங்க உத்தியோகத்தர்கள்ää பல்கலைக்கழக மாணவர்கள்ää க.பொ.த(உ.த)சித்தியடைந்த மாணவர்கள் ஆகியோர்களை கொண்டு முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் அமைந்துள்ள நாகசக்தி சிறுவர்கழக கட்டிடத்தில் இரவு நேர வகுப்பினை இடைவிலகல் மாணவர்களுக்கு நடாத்தி வந்தது. இதன் மூலம் இவ்வமைப்பு சிறந்த வெற்றியை பெற்றதன் விளைவாக பெற்றார்கள் பலரின் வேண்டுகோளுக்கமைய தரம் 03 தொடக்கம் தரம் 08 வரையான மாணவர்களுக்கு மாலை 06.00மணி தொடக்கம் மாலை 08.00மணி வரை இரவு நேர வகுப்பினை நடாத்த உடன்பட்டு இன்று வரை சிறப்பாக இதனை நடாத்திக் கொண்டிருக்கின்றது.

02. வளர்ச்சி

       2009.08.01ம் திகதி இவ்வமைப்பு கல்வி புலத்திற்கு அதிக சேவையை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இவ்வமைப்பு உருhக்கப்பட்டு எமது பிரதேசத்தில் காணப்பட்ட ஆசிரியர்கள்ää அரசாங்க உத்தியோகத்தர்கள்ää பல்கலைக்கழக மாணவர்கள்ää க.பொ.த(உ.த)சித்தியடைந்த மாணவர்கள் ஆகியோர்களின் உதவியுடன் இரவு நேர கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை நடாத்திக் கொண்டு வருகின்றது. இவ்வமைப்பு 2009ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போது 30மாணவர்களே கல்வி கற்றனர். பின் 2009ம் ஆண்டு இறுதிப்பகுதியில் 75 மாணவர்கள் கல்வி கற்று வந்தனர். பின் 2010ம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது இதன் காரணமாக 07 வகுப்புக்களாக பிரிக்கப்பட்டன அவையாவன தரம் 03ää04ää05ää06ää07ää08 மாணவர்களை கொண்ட வகுப்புக்களுடன் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களிலும் குறைந்த மாணவர்களை எடுத்து அவர்களுக்கு எண்ணறிவுää எழுத்தறிவு என்பன கற்பிக்கப்பட்டன. இக்காலத்தில் 157மாணவர்கள் கல்வி கற்றனர். பின் 2011ம் ஆண்டு மாணவர்களின் தொகை 200க்கு மேற்பட்டதாக காணப்பட்டது. பின் 2012ம் ஆண்டு 281 மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றனர்.

செயற்பாடு

1.                                                    எழுதளிர் அமைப்பானது பின்தங்கிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் முகமாக ஆரம்பிக்கப்பட்டு மாணவர்களது கல்வி முன்னேற்றத்தையும்ää திறமையையும் வெளியுலகிற்கு கொண்டு வரும் நோக்கத்துடன் மாலை 06 மணி தொடக்கம் 08மணி வரை வெள்ளிக்கிழமை தவிர்ந்த மற்றைய 06நாட்கள் தரம் 03 தொடக்கம் தரம் 08 வரையான மாணவர்களுக்கு கல்வி கற்பித்தல்

2.                                                     மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை பரீட்சையும்ää அது தொடர்பான பெற்றார் சந்திப்புக்களும். நடாத்துதல்

 

3.   மாணவர்களது திறமைகளுக்கு களமைக்கும் வகையில் போட்டி நிகழ்வுகள்ää வருடத்தில் மூன்று மாணவர் மன்றம் நடாத்துதல்

4.   வருடத்தின் முதல் நாளில் மாணவர் சஞ்சிகை வெளியிடல்

5.  தரம் :-05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் பட்டிப்பளைப்பிரதேசத்தில் இருக்கின்ற அனைத்து மாணவர்களையும் ஒன்றினைத்து பரீட்சைக்கு உதவும் வகையில் முன்னாயத்த கருத்தரங்கினை நடாத்துதல்.

6.   வருடத்தில் ஒரு முறை கல்வி சுற்றுலாவை மேற்கொள்ளல்.

7.   மாணவர்ளது கலை ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் வருடத்தில் ஒருமுறை கலை நிகழ்வை நடாத்துதல். அந்நிகழ்வில் பரிசளிப்பு விழாவையும் நடாத்துதல்.

     வளங்கள்      :

           பௌதீக வளம்  : தற்காலிக கொட்டில்

03. பிரச்சினைகள் :

·        இரவு நேர வகுப்பில் 280க்கு மேற்பட்ட தரம்-03 தொடக்கம் தரம் -08 வரையான 06வகுப்புக்கள் காணப்படுகின்றது. இங்கு 02 வகுப்புக்களுக்கான வகுப்பறைகள் மட்டுமே காணப்படுகின்றது. மற்றைய மாணவர்கள் ஆல மரநிழலில் கீழ் இருந்து கற்கின்றனர். இதனால் மழைகாலங்களில் கற்றல்ää கற்பித்தல் செயற்பாட்டை தொடரமுடியாமல் உள்ளது.

·        எழுதளிர் அமைப்பிற்கான நிதி வருவாய்க்கள் குறைந்த நிலையில் காணப்படுவதனால் மாணவர்களுக்கான பரீட்சைகள் மற்றும் பிற செயற்பாடுகளை கொண்டு செல்வதில் சில சிக்கல்கள் காணப்படுன்றது.

·        மாணவர்களுக்கு சிறப்பாக விளங்கப்படுத் முடியாமையுள்ளது. காரணம் வெண்பலகைகள் குறைந்தளவில் காணப்படுகின்றது.

·        எமது பிரதேச மாணவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றவர்கள் என்பதினால் அவர்களுக்கு கற்பதில் ஆர்வமுள்ள போதும். அவர்களுக்கான கற்றல் செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இல்லாமை.

·        இரவு நேரத்தில் பயன்படுத்தக்கூடிய நூலக வசதியை ஏற்படுத்தியுள்ள போதும் அதற்கான நூல்கள் குறைந்தளவிலே காணப்படுகின்றது.

04. குறிக்கோள் :

     மாணவர்களுக்கு சிறந்த கல்வியினை ஊட்டி அவர்களை முன்னேற்றி ஒழுக்கமுள்ளவர்களாகவும்ää கலை கலாசாரத்தை மதிக்ககூடியவர்களாகவும்ää  சமூக சேவையாளர்களாகவும்ää உருவாக்கி கல்வியின் ஊடாக எமது பிரதேசத்தை எழுச்சியடைய செய்தல்.


தொகுப்பு :- வ.துசாந்தன்                         

கருத்துகள் இல்லை