பவளக்கொடி வடமோடிக் கூத்து

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், ஜனாதிபதியின் ஆலோசகரமும் ஆகிய கௌரவ சிவனேசதுரை சந்திரகாந்தன், பேராசிரியர் மௌனகுரு கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவர் ஜெயசங்கர் மற்றும் விரிவுரையாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இற்றைக்கு 30வருடங்களுக்கு முன் இக்கூத்து இக்கிராமத்தில் ஆடப்பட்டிருந்ததுடன் இதில் ஆடிய கலைஞர்கள் அண்ணாவிமார்கள் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு எமது பாரம்பரிய முறைப்படி கூத்துக்களரி அமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக தோரணம் கட்டப்பட்டிருந்ததுடன் கூத்து முடிவடைந்து ஞாயிற்றுக்கிழமை காலை கூத்துக் கலைஞர்கள் மற்றும் கிராம பெரியவர்கள் வீடுகளுக்கு சென்று கூத்து ஆடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment