Header Ads

முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் ஆசிரியர்களை கௌரவிக்கும் ஆசிரியர் தின விழா

முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் ஆசிரியர்களை கௌரவிக்கும் ஆசிரியர் தின விழா நிகழ்வுகள் இன்று(12) திங்கட்கிழமை பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

மாலைகள் அணிவிக்கப்பட்டு நினைவுச்சின்னங்களும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டதுடன், ஆசிரியர்கள் மாணவர்களது கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப்பணிப்பாளர் ந.தயாசீலன், உதவிக்கல்விப் பணிப்பாளர் க.ரஞ்சிதமலர், ஒளிக்கல்லூரி அமைப்பின் அதிபர் மா.சத்தியநாயகம் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.