Header Ads

இரு தொடர்ச்சியான தோல்வியை அடுத்து இவ்வாண்டின் முதலாவது வெற்றியுடன் இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம்.

கடந்த இரண்டு வாரங்களில் சில்லிக்கொடியாறு பராசக்தி கழகமும் பனையறுப்பான் கஜமுகா கழகமும் நடாத்திய உதைபந்தாட்ட போட்டிகளில் காலிறுதியில் தோல்வியை தழுவியிருந்த முனைக்காடு இராமகிருஸ்ணா அணியினர் இவ்வாரம் 6-7 வைகாசி 2017 ஆகிய
இரு நாட்கள் விளாவெட்டுவான் ராஜா விளையாட்டுக்கழகம் நடாத்திய உதைபந்தாட்ட போட்டியில் வெற்றியினை தனதாக்கியது.

விளாவெட்டுவான் ராஜா விளையாட்டுக்கழகம் “விளாவூர் யுத்தம்” என்ற தொனியில் கழகத்தின் 47ம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்திய உதைபந்தாட்ட போட்டியானது நேற்றும் (06) இன்றும் (07) சிறப்பாக நடைபெற்றது. வவுணதீவு,பட்டிப்பளை பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 27 அணிகள் பங்குபற்றி தங்களது திறமையினை வெளிக்காட்டின. கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் களமாடியதைப்போன்று இவ்வாண்டும் முனைக்காடு இராமகிருஸ்ணா அணியினரும் முதலைக்குடா விநாயகர் அணியினரும் இறுதிப்போட்டியில் களமாடி குறித்த நேரத்தினுள் எதுவித கோள்களும் போடாமையினால் தண்டனை உதைமூலம் 5:5, 5:4 என்ற வித்தியாசத்தில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டு கழகம் கிண்ணத்தை தனதாக்கியது. அத்துடன் முனைக்காடு இராமகிருஸ்ணா அணியின் அடுத்த அணி 4ம் இடத்தையும் பெற்றுக்கொள்ள 2ம் இடத்தினை முதலைக்குடா விநாயகர் அணியினரும், 3ம் இடத்தை காஞ்சிரங்குடா ஜெகன் அணியினரும் பெற்றுக்கொண்டனர்.
வசந்தம் TV, வசந்தம் FM ஊடக அனுசரணையில் நடாத்தப்பட்ட இவ் உதைபந்தாட்ட போட்டிக்கு அதிதிகளாக வவுணதீவு பிரதேச சபையின் செயலாளர் திருமதி புத்திசிகாமணி, வைத்திய கலாநிதி மு.முரளிதரன், வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வசந்தம் வுஏ, வசந்தம் குஆ ஊடகத்தின் சிரேஸ்ட ஆசிரியர் மற்றும் கிராமத்து பிரதிநிதிகள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் வெற்றிக்கிண்ணங்களையும் வழங்கி சிறந்த பந்துக்காப்பாராக தெரிவு செய்யப்பட்ட முதலைக்குடா விநாயகர் அணியின் வீரர் குபேஸ், சிறந்த விளையாட்டு வீரராக தெரிவு செய்யப்பட்ட முனைக்காடு இராமகிருஸ்ணா அணியின் வீரர் தேவா அவர்களுக்கும் வழங்கி வைத்தனர்.


முனைமண்ணின் சொந்தங்களுக்கு மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்