Header Ads

கடல் கடந்த முனையின் கரங்கள் அமைப்பினால் நிகழ்வு

கடல் கடந்த முனையின் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சாதனையாளர் கௌரவிப்பும், வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வும் நாளை(02.06.2017) வெள்ளிக்கிழமை பிற்பகல் 3மணிக்கு முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் அமைப்பின் தலைவர் அ.வரதன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், விசேட அதிதியாக கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், சிறப்பு அதிதிகளாக முனைக்காடு விவேகானந்த வித்தியாலய அதிபர் மா.சத்தியநாயகம், சாரதா வித்தியாலய அதிபர் க.கிருபைராசா, கௌரவ அதிதிகளாக முனைக்காடு கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வுக்கு முனை மண்ணின் சொந்தங்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றனர் கடல் கடந்த முனையின் கரங்கள் அமைப்பினர். 

சிறப்பான சேவையும் முன்னெடுக்கும் அமைப்புக்கு எமது முணைமண்ணின் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.