Header Ads

நூற்றாண்டு இறுதி நாள் நிகழ்ச்சி

முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவின் இறுதிநாள் நிகழ்ச்சி இன்று(11) இடம்பெற்றது.

வித்தியாலயத்தின் அதிபர் மா.சத்தியநாயகம் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்ச்சியில் விவேகம் சிறப்பு மலர் வெளியீடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், மாகாணக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது நூற்றாண்டு நினைவுச்சின்னங்களும், சாதனைகளை நிலைநாட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமையுடன், பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன.













கருத்துகள் இல்லை