Header Ads

பிரியாவிடை நிகழ்ச்சி

முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தில் அதிபராக சேவையாற்றி ஓய்வுபெற்றுச் செல்லும் மா.சத்தியநாயகம் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்ச்சி இன்று(12) வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

வித்தியாலய பிரதி அதிபர் கை.தெய்வேந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் மூ.உதயகுமாரன், பாடசாலை மேம்பாட்டு உத்தியோகத்தர் ம.லச்சுதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன் போது பொன்னாடை போர்த்தி, வாழ்த்துப்பா வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

குறித்த பாடசாலையில் பழைய மாணவராகவும், ஆசிரியராகவும், பிரதி அதிபராகவும், அதிபராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லுகின்றமை குறிப்பிடத்தக்கது.










கருத்துகள் இல்லை