Header Ads

அங்கத்துவ சின்னம் சூட்டும் நிகழ்வு

மட் /முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று(24) செவ்வாய்க்கிழமை சாரண மாணவர்களுக்கு அங்கத்துவ சின்னம் சூட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

திரு.நா.குருச்சந்திரராசா, திரு.அ.இராமேஸ்வரன், அ.சுபோதினி ஆகியோரால் வழிநடத்தப்பட்ட 24 அங்கத்தவர்களுக்கு அங்கத்துவ  சின்னம் மற்றும் கழுத்துப்பட்டிகள் அணியப்பட்டது.


இதன் போது 08பெண் சாரணிய மாணவர்களுக்கும் இன்று அங்கத்துவ சின்னம் முதன் முறையாக இப்பாடசாலையில் சூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வித்தியாலய சாரண ஆசிரியர் திரு.நா.குருச்சந்திரராசா அவர்களின் தலைமையிலும் வித்தியாலய அதிபர் திரு.பொ.நேசதுரை அவர்களின் வழிகாட்டலிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட சாரண ஆணையாளர் திரு.G.P. ஆனந்தராசா,  உதவி மாவட்ட சாரண ஆணையாளர் திரு.வ.சுப்பிரமணியம், மாவட்ட சாரணிய அணிகளின் தலைவர் திரு.பொ.மேகவண்ணன், பாடசாலை சாரண ஆசிரியர் திரு.அ.இராமேஸ்வரன்,அ.சுபோதினி, பாடசாலை ஆசிரியர்கள்,பழைய சாரண அங்கத்தவர்கள்  மற்றும் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.














கருத்துகள் இல்லை