Header Ads

முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சூரன்போர் நிகழ்வு

இந்து மக்களால் அனுஸ்டிக்கப்படும் சிறப்புவாய்ந்த விரதங்களில் ஒன்றான கந்தசஸ்டி விரதத்தின் ஆறாம் நாளாகிய இன்று(17) செவ்வாய்கிழமை ஆலயங்கள் தோறும் சூரன்போர் நிகழ்வு மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

அவ்வகையில் முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சூரபத்மனை வீதி ஊர்வலமாக கிராமம் பூராக கொண்டு சென்று ஆலயத்தின் வீதியில் மிகவும் சிறப்பாக சூரன்போர் நிகழ்வு இடம்பெற்றது.