கொட்டாம்புலைப்பிள்ளையார் ஆலய இறுதி நாள் திருவிழா
முனைக்காடு அருள்மிகு ஸ்ரீ கொட்டாம்புலைப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத் திருவிழாவின் இறுதி நாள் திருவிழா நேற்று(20) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மேள தாள வாத்தியம் முழங்க மந்திர ஒலிகளும் ஒலிக்க மூலமூர்த்தி, பரிவார தெய்வங்களுக்கு பூசை ஆராதனைகள இடம்பெற்று வசந்த மண்டபபூசைகளும், உள்வீதி, வெளிவீதி திருவிழாவும் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
இப்பூசை ஆராதனைகளில் அடியார்கள் பலரும் கலந்து கொண்டனர்.



Post a Comment