Header Ads

முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம் முதலிடம்

நெல்லிக்காடு தீபம் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற உதைபந்தாட்டப்போட்டியில் இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இறுதிச்சுற்றுப்போட்டியில் மோதிய காஞ்சிரங்குடா ஜெகன் விளையாட்டுக்கழகமும் முனைக்காடு இராமகிருஸ்ண விளையாட்டுக்ககமும் ஒன்றையொன்று எதிர்த்தாடி இராமகிருஸ்ணா முதலிடத்தை பெற்றது. இரண்டாம் இடத்தை காஞ்சிரங்குடா ஜெகன் விளையாட்டுக்கழகமும் பெற்றுக்கொண்டது.

நெல்லிக்காட்டில் நேற்று(20) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றி கிண்ணங்களும் வழங்கப்பட்டது.

இப்போட்டியில் வெற்றியீட்டிய அணிக்கு முனைமண்ணின் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.