Header Ads

முனைக்காடு விவேகானந்தா வித்தியாலயத்தில் பிரிவுபசார நிகழ்வு

முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயின்று இவ்வருடம் கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பிரிவுபசார நிகழ்வு இன்று(04) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு 2019ம் ஆண்டு தோற்றவுள்ள மாணவர்களின் ஒழுங்கமைப்பில், வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் மா.சத்தியநாயம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்களும் பங்கேற்றனர்.