Header Ads

துளி அருவி மாணவர்களின் ஏற்பாட்டில் ஆசிரியர் தின நிகழ்வு

துளி அருவி அமைப்பில் கற்கும் மாணவர்களின் ஏற்பாட்டில் ஆசிரியர் தின நிகழ்வு சனிக்கிழமை(14) இரவு முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இதன் போது, துளி அருவி அமைப்பினால் முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் நடாத்தப்படும் இரவுநேர கற்றல், கற்பித்தல் செயற்பாட்டில் கற்பித்துக் கொண்டிருப்பவர்கள் மாணவர்களினால் மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுச்சின்னம் வழங்கி கௌவிக்கப்பட்டனர்.


இந்நிகழ்வில்,  வித்தியாலய அதிபர் மா.சத்தியநாயகம், துளியருவி அமைப்பின் முன்னாள் பொருளாளர் சி.ஜீவிதன், செயலாளர் பொ.திஜாந் மற்றும் தற்போதைய நிருவாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.